செய்திகள்

விருத்தாசலத்தில் மணல் கடத்திய 5 பேர் கைது

Published On 2018-11-22 16:37 IST   |   Update On 2018-11-22 16:37:00 IST
விருத்தாசலம் அருகே அனுமதியின்றி மணல் கடத்தியதாக 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் ஆலடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அபோது அப்பகுதி வழியாகச் சென்ற 5 மாட்டு வண்டிகளை நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அனுமதியின்றி விருத்தாசலம் மணிமுத்தாற்றில் இருந்து மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து டி.கோபுராபுரத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் (30), ஜெயகுமார்(26), ராசு(30), தனவேல் (38), ஜெயகிருஷ்ணன் (30) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News