செய்திகள்

ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாயி வீட்டுக்குள் புகுந்து 13 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2018-11-16 11:52 GMT   |   Update On 2018-11-16 11:52 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாயி வீட்டுக்குள் புகுந்து 13 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள எட்டியத்திடல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேத சூசைமாணிக்கம் (வயது 81). விவசாயியான இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்று விட்டார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 13 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

மாலையில் வீடு திரும்பிய வேத சூசைமாணிக்கம் நகை, பணம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில், எட்டியத்திடலை சேர்ந்த ஒரு நபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News