செய்திகள்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி

Published On 2018-11-12 18:22 GMT   |   Update On 2018-11-12 18:22 GMT
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான ஓவிய போட்டி பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தில் நேற்று நடந்தது.
பெரம்பலூர்:

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான ஓவிய போட்டி பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தில் நேற்று நடந்தது. போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு இயற்கை தொடர்பான ஓவியங்களை ஆர்வத்துடன் வரைந்தனர். இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மழலையர் முன்னேற்ற மன்றத்தின் தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார்.

சமூக ஆர்வலர் முகம்மது இக்பால் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தனியார் பள்ளியின் தாளாளர் மங்கை விஜயா, கல்லூரி பேராசிரியை செல்வி ஆகியோர் கலந்து கொண்டு ஓவிய போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்வழங்கப்பட்டது.
Tags:    

Similar News