செய்திகள்
தாம்பரம் அருகே பேராசிரியை வீட்டில் நகை கொள்ளை
தாம்பரம் அருகே பேராசிரியை வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் சுவாமி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் பொன்னையா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காளிஸ்வரி. தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
நேற்று வீட்டை பூட்டிவிட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். மாலை திரும்பி வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.