செய்திகள்

சின்ன காஞ்சீபுரம் அருகே தீக்குளித்து நூலகர் தற்கொலை

Published On 2018-11-01 22:19 IST   |   Update On 2018-11-01 22:19:00 IST
சின்ன காஞ்சீபுரம் அருகே மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி நூலகர் தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம்:

சின்ன காஞ்சீபுரம் நாகலூத்து தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 42, இவர் காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கத்தில் உள்ள அரசு நூலகத்தில் நூலகராக வேலை செய்து வந்தார். மேலும் இவர் மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார்.

திடீரென நூலகர் பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.

தற்கொலை குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News