செய்திகள்
தூத்துக்குடி அருகே பெயிண்டர் தற்கொலை
தூத்துக்குடி அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முள்ளக்காடு:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் எம். தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 32). பெயிண்டர். இவரது மனைவி புஷ்பலதா(27). மாரிமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. சமீப காலமாக கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து கடந்த மாதம் கணவரிடம் கோபித்து கொண்டு புஷ்பகலா, தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த மாரிமுத்து நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்த மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.