செய்திகள்

தாராசுரத்தில் இன்று காலை ரெயில் மோதி சிறுவன் பலி

Published On 2018-10-31 11:05 GMT   |   Update On 2018-10-31 11:05 GMT
தாராசுரத்தில் இன்று காலை ரெயில் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் 14 மனை தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 12). மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணமூர்த்தி தாராசுரத்தில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மயிலாடுதுறையில் இருந்து தஞ்சைக்கு வந்து கொண்டிருந்த பாசஞ்சர் ரெயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ண மூர்த்தி துடிதுடித்து பலியானார்.

இதுபற்றி தகவலறிந்ததும் கும்பகோணம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பலியான கிருஷ்ண மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News