செய்திகள்

சிவகிரியில் அதிமுக பொதுக்கூட்டம் அமைச்சர் ராஜலெட்சுமி பங்கேற்பு

Published On 2018-10-29 14:58 GMT   |   Update On 2018-10-29 14:58 GMT
சிவகிரியில் வாசு தேவநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் ராஜலெட்சுமி பங்கேற்றார்.
சிவகிரி:

சிவகிரியில் வாசு தேவநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மூர்த்திபாண்டியன், மாநகர மாவட்ட இளைஞரணி செயலாளர் சவுக்கை வெங்கடேசன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சாமிவேல், துணை செயலாளர் பெரியதுரை, மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் ஆயில்ராஜாபாண்டியன், சின்னத்துரை, குருசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் துக்காண்டி வரவேற்றார். காசிராஜன் தொகுத்து வழங்கினார். 

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலெட்சுமி, மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, மாநகர பேரவை செயலாளர் ஜெரால்டு, சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், தீக்கனல் லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் ஒன்றிய அவைத் தலைவர் முகம்மது உசேன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன் செய்திருந்தார்.
Tags:    

Similar News