செய்திகள்
செங்கல்பட்டில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி
செங்கல்பட்டில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மறைமலை நரை அடுத்து பனங்காட்டுரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவருடைய மகன் ஹேமச்சந்திரன் (14). இவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு அரசு பஸ்சில் சென்றார். பள்ளி அருகே சென்றதும் ஓடும் பஸ்சில் இருந்து இறங்கினார்.
அப்போது மாணவர் ஹேமச்சந்திரன் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிழந்தார்.
இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.