செய்திகள்
ராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டில் 32 பவுன்- ரூ.80 ஆயிரம் கொள்ளை
ராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டில் இருந்து 32 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பட்டணம் காத்தானில் உள்ள மீனாட்சி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் மாலதி (வயது 60). தனியாக வசித்து வந்த இவர் கடந்த 19-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த 32 பவுன் நகை, ரூ. 80 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
போலீஸ் தகவல் அறிக்கையில் கொள்ளைபோன நகை, பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 500 என குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பட்டணம் காத்தானில் உள்ள மீனாட்சி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் மாலதி (வயது 60). தனியாக வசித்து வந்த இவர் கடந்த 19-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த 32 பவுன் நகை, ரூ. 80 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
போலீஸ் தகவல் அறிக்கையில் கொள்ளைபோன நகை, பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 500 என குறிப்பிடப்பட்டுள்ளது.