செய்திகள்

முன்விரோத தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி - ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

Published On 2018-10-22 17:03 GMT   |   Update On 2018-10-22 17:03 GMT
முன்விரோத தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் முரளிதரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்:

தர்மபுரி மாவட்டம் பாப்புரெட்டிபட்டியை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 27). இவர் கரூரில் ஒரு தனியார் ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மற்றொரு ஆம்புலன்சில் டிரைவர்களாக பணியாற்றி வரும் மண்மங்கலம் புஞ்சை தோட்டக்குறிச்சியை சேர்ந்த முருகானந்தம்(38), இளங்கதிர் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி கரூர்-கோவை ரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பு முரளிதரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகானந்தம், இளங்கதிர் ஆகியோர் அவரிடம் கடுமையான வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருவரும் சேர்ந்து வயர் மற்றும் வாழைமர கன்று ஆகியவற்றால் முரளிதரனை சரமாரியாக தாக்கினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முரளிதரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அவர் கரூர் டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தார். இதில் தொடர்புடைய இளங்கதிரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News