செய்திகள்

குடியாத்தம் அருகே இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

Published On 2018-10-20 11:37 GMT   |   Update On 2018-10-20 11:37 GMT
குடியாத்தம் அருகே இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த கூடநகரம் பார்வதியா புரத்தை சேர்ந்தவர் வாசு, எலக்ட்ரீசியன். இவரது மனைவி வனிதா (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது. ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வனிதா இன்று காலை வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News