செய்திகள்
காடையாம்பட்டி அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி
காடையாம்பட்டி அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள வீசாரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 32). தச்சு தொழிலாளியான இவர் நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்னர் மாயமானதால் அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை சின்ன திருப்பதி அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் அவர் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவர் ரெயில் மோதி இறந்திருக்கலாம் என்று கூறினர்.
மேலும் அவரது உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.