செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
விராலிமலை:
விராலிமலை அருகே உள்ள கோனாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 33). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு செல்வதற்காக கொடும்பாளூர் சத்திரத்தில் உள்ள பிரிவு சாலையை கடந்துள்ளார். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக பாக்கியராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாக்கியராஜ் படுகாயமடைந்தார்.
இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பாக்கியராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை அருகே உள்ள கோனாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 33). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு செல்வதற்காக கொடும்பாளூர் சத்திரத்தில் உள்ள பிரிவு சாலையை கடந்துள்ளார். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக பாக்கியராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாக்கியராஜ் படுகாயமடைந்தார்.
இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பாக்கியராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.