செய்திகள்

புதிய தலைமை செயலக வழக்கு- லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு பரிந்துரைத்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை

Published On 2018-10-12 12:03 GMT   |   Update On 2018-10-12 12:03 GMT
புதிய தலைமை செயலக வழக்கில் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு பரிந்துரைத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #DMK #MKStalin #NewChiefSecretariatCase
சென்னை:

சென்னை அரசினர் தோட்டத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின் போது புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது.

அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுபற்றி விசாரிக்க ரகுபதி ஆணையம் உருவாக்கப்பட்டது.

இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவின்படி ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த தனி நீதிபதி புதிய தலைமை செயலக முறைகேடு பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அப்பீல் செய்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் முன்பு எடுத்து கொள்ளப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு பரிந்துரைத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தனர். அதோடு இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.   #DMK #MKStalin #NewChiefSecretariatCase
Tags:    

Similar News