செய்திகள்

ஈரோடு தறிப்பட்டறை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-10-11 12:31 GMT   |   Update On 2018-10-11 12:31 GMT
மனைவி தனிக்குடித்தனத்துக்கு வலியுறுத்தியதால் மனமுடைந்த தறிப்பட்டறை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

ஈரோடு இடையன் காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது40).இவரது மனைவி பூமதி (30). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கார்த்தி ஈரோட்டில் சொந்தமாக தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். கார்த்தி- பூமதி கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் பூமதி தனது கணவரிடம் தனிக்குடித்தனம் போகலாம் என்று வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலையும் இது சம்பந்தமாக பூமதி கார்த்திக்கிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கார்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News