செய்திகள்

சென்னை வந்தடைந்த குடியரசு துணை தலைவருக்கு உற்சாக வரவேற்பு

Published On 2018-10-10 15:26 GMT   |   Update On 2018-10-10 15:26 GMT
மூன்று நாள் பயணமாக சென்னை வந்துள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #Venkaiahnaidu #Edappadipalaniswami #BanwarilalPurohit
சென்னை:

சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் எத்திராஜ் கல்லூரியின் பிளாட்டினம் ஜூப்ளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்துள்ளார்.

இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Venkaiahnaidu #Edappadipalaniswami #BanwarilalPurohit
Tags:    

Similar News