செய்திகள்

மேடவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

Published On 2018-10-10 09:21 GMT   |   Update On 2018-10-10 09:21 GMT
மேடவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கரணை:

மேடவாக்கம் கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வம் மனைவி தனபாக்கியம் (65). இன்று காலை மேடவாக்கம் கூட்டுரோட்டை கடக்க முயன்றார். அப்போது மேடவாக்கத்தை சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தனபாக்கியம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News