செய்திகள்
கிழக்கு கடற்கரை சாலையில் கொலை செய்யப்பட்டவர் நெய்வேலியை சேர்ந்தவர்
கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டவர் நெய்வேலியை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மாமல்லபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் நெய்வேலியை சேர்ந்த அருண்பிரகாஷ் (24) என்பது தெரிந்தது.
மர்ம நபர்கள் அவரை கடத்தி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்து உள்ளனர். கொலையுண்ட அருண்பிகாஷ், என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் சென்னை ஒரகடத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். அந்த கட்டுமான நிறுவனம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் புதிதாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனை பார்த்த அவர் இங்கு அடிக்கடி வந்து சென்றார்.
இதுபோல் அருண் பிரகாஷ் வந்து சென்ற போது தான் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
இது கொடர்பாக அருண்பிரகாசிடம் நெருங்கி பழகியவர்கள் யார்-யார்? கடைசியாக அவரிடம் பேசியவர் யார்? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. #tamilnews
மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மாமல்லபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் நெய்வேலியை சேர்ந்த அருண்பிரகாஷ் (24) என்பது தெரிந்தது.
மர்ம நபர்கள் அவரை கடத்தி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்து உள்ளனர். கொலையுண்ட அருண்பிகாஷ், என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் சென்னை ஒரகடத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். அந்த கட்டுமான நிறுவனம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் புதிதாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனை பார்த்த அவர் இங்கு அடிக்கடி வந்து சென்றார்.
இதுபோல் அருண் பிரகாஷ் வந்து சென்ற போது தான் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
இது கொடர்பாக அருண்பிரகாசிடம் நெருங்கி பழகியவர்கள் யார்-யார்? கடைசியாக அவரிடம் பேசியவர் யார்? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. #tamilnews