செய்திகள்

திருச்சியை குளிர்வித்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2018-10-03 16:31 GMT   |   Update On 2018-10-03 16:31 GMT
திருச்சியில் நேற்று மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருச்சி:

திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெப்பத்தின் தாக்கத்தினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் நேற்று காலை வெயில் அடித்த நிலையில்  பகலில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்தது.  சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாமல் லேசான தூறலுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால்  பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  நேற்று போல் இன்று பகலிலும் மழை பெய்தது. இதனால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடைபி டித்தப்படி சென்றனர். வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து செல்லும் நிலை ஏற்பட்டது.  

2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததன் மூலம் திருச்சியில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
Tags:    

Similar News