செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்து - 3 பேர் காயம்

Published On 2018-10-03 16:27 GMT   |   Update On 2018-10-03 16:27 GMT
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
சிவகங்கை:

மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்தவர் அங்குரகு (வயது 28). இவருடைய மனைவி முனீஸ்வரி (25), மகன் விஜயராஜன் (10). இந்தநிலையில் அங்குரகு மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் கல்லலை அடுத்த நடராஜபுரத்தில் இருந்து சென்று கொண்டிருந்தார்.

அழுபிள்ளைதாங்கி கண்மாய் அருகே வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. அதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News