செய்திகள்

கந்தர்வக்கோட்டை சுங்கசாவடி தடுப்பு கம்பியில் மோதி வாலிபர் பலி

Published On 2018-10-03 15:00 GMT   |   Update On 2018-10-03 15:00 GMT
பஸ்சில் தொங்கியபடி சென்ற வாலிபர் சுங்கசாவடி தடுப்பு கம்பியில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
கந்தர்வக்கோட்டை:

கந்தர்வக்கோட்டை பெரியகடை வீதியை சேர்ந்தவர் குமார். டெய்லர். இவரது மகன் கார்த்தி (வயது 18). இவர் தஞ்சாவூரில் வேலை பார்த்து வந்தார். 

தினமும்பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இன்றும் வழக்கம் போல் தஞ்சாவூருக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறி வேலைக்கு சென்றார். பஸ்சில்  கூட்டம் அதிகமாக இருந்ததால் கார்த்தி படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. 

பஸ் இன்று காலை 9 மணியளவில் கந்தவர்க்கோட்டை புதுநகர் அருகே உள்ள சுங்கசாவடியை கடந்து சென்றது. அப்போது கார்த்திக்கின் தலை எதிர் பாராதவிதமாக அங்கிருந்த தடுப்பு கம்பியில் பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு கார்த்தி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் கார்த்தி பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவர் செல்லத்துரையிடம் விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News