செய்திகள்

சென்னையில் காந்தி ஜெயந்தியன்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் - கலெக்டர் அறிவிப்பு

Published On 2018-09-27 03:24 GMT   |   Update On 2018-09-27 03:24 GMT
சென்னை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று கலெக்டர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #GandhiJayanti
சென்னை:

சென்னை கலெக்டர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2-ந் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற கிளப்புகள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

மீறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #GandhiJayanti
Tags:    

Similar News