செய்திகள்

தேனி அருகே இளம்பெண்ணை கடத்திய ஆட்டோ டிரைவருக்கு வலை

Published On 2018-09-24 10:35 GMT   |   Update On 2018-09-24 10:35 GMT
தேனி அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகில் உள்ள தேக்கம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் இருளாண்டி. இவரது மனைவி செண்பகம் (வயது34). சம்பவத்தன்று இருளாண்டி வங்கிக்கு சென்று திரும்பி வந்தார்.

வீட்டில் இருந்த தனது மனைவியை காணாமல் திடுக்கிட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

தனது புகாரில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் என்பவர் தான் தனது மனைவியை கடத்தி சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

தேவதானப்பட்டி அருகில் உள்ள டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சோனியா (24). இவர்களுக்கு சந்தியா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. சோனியா கடந்த 2 மாதமாக தேனியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று குழந்தையுடன் பால் வாங்க சென்ற சோனியா வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் ராஜா கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள மேலமஞ்சநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் நாகேஸ்வரன். இவரது மகன் முத்துக்குமார் (25), இவர் தேனியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துக்குமார் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News