செய்திகள்

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.22 லட்சம் தங்கம் கடத்தல் - 2 பேர் சிக்கினர்

Published On 2018-09-23 11:32 GMT   |   Update On 2018-09-23 11:32 GMT
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #goldsmuggling

ஆலந்தூர்:

மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு விமானம் ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த இப்ராகிம் என்பவர் கொண்டு வந்த டேபிள் மின் விசிறியை சோதனை செய்தனர். அதில் 350 கிராம் எடையுள்ள தங்க கட்டி மற்றும் தங்க செயினை மறைத்து வைத்து வந்தது தெரிந்தது.

அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியான சென்னையைச் சேர்ந்த முகமது 400 கிராம் எடையுள்ள 2 தங்க கட்டிகளை குடியுரிமை பகுதியில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்து விட்டு, சுங்க சோதனை முடிந்து வெளியே செல்லும் போது மீண்டும் தங்கக் கட்டிகளை எடுக்க முயன்றார்.

அப்போது அவரை சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்தனர். 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும். #goldsmuggling

Tags:    

Similar News