செய்திகள்
2019-க்குள் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்- இல.கணேசன் பேச்சு
2019-க்குள் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என இல. கணேசன் கூறினார். #ilaGanesan #petroldiesel
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் இல.கணேசன் எம்.பி. பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி அரசு. முத்ரா வங்கி திட்டம் மூலம் 10 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்.
பா.ஜ.க. கட்சி எந்த மதத்திற்கும் ஆதரவானவர்களும் அல்ல எதிரானவர்களும் அல்ல.
பா.ஜ.கவிற்கு நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் அப்துல் கலாமையே குடியரசு தலைவராக வைத்து அழகு பார்த்தோம். அதே சமயம் துரோகம் செய்தால் கூண்டோடு அழிப்போம்.
2019-க்குள் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். பெட்ரோல், டீசல் உயர்வுக்கு மத்திய அரசு காரணம் அல்ல.
இவ்வாறு அவர் பேசினார். #ilaGanesan #petroldiesel