செய்திகள்

குடிக்க பணம் தராததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

Published On 2018-09-22 14:34 GMT   |   Update On 2018-09-22 14:34 GMT
மத்தூர் அருகே மகன்கள் குடிக்க பணம் தராததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள குல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காசியப்பன் (வயது70). விவசாயியான இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இதனால் தனது மகன்களிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காசியப்பன் தனது மகன்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனமுடைந்த காசியப்பன் கடந்த 19-ந்தேதி அன்று வீட்டில் வயலுக்கு அடிக்க பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவரை பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக காசியப்பன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News