செய்திகள்

கடலூர் புதுநகர் போலீசில் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு

Published On 2018-09-21 10:22 GMT   |   Update On 2018-09-21 10:22 GMT
கடலூர் புதுநகர் போலீசில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் ராஜகோபால சாமி கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, கடலூர் புதுநகர் போலீசில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது புகார் மனு கொடுத்தார்.

அதில், பெண்களை இழிவுபடுத்தியும், கோவில் ஊழியர்களை பற்றியும் எச்.ராஜா தவறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்பேரில் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News