செய்திகள்
திருப்போரூரில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது- வாலிபர் குடும்பத்துடன் தப்பினார்
திருப்போரூரில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து புகை வருவதை அறிந்த வாலிபர் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக இறங்கியதால் உயிர் தப்பினர்.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த மடையத்தூரைச் சேர்ந்தவர் சிவா. இவர் நேற்று இரவு மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்போரூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
இரவு 8 மணியளவில் திருப்போரூர் அடுத்த தண்டலம் அய்யப்பன் கோவில் அருகே வந்தபோது காரின் ஏ.சி.யிலிருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக சிவா, மனைவி மற்றும் குழந்தையுடன் இறங்கினார். சிறிது நேரத்தில் கார் கொழுந்து விட்டு எரிந்தது.
இதுபற்றி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறு சேரி தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பிடித்த தீயை அணைத்தனர். என்றாலும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
கார் ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சிவா குடும்பத்துடன் கீழே இறங்கியதால் அவர்கள் தப்பினர்.
இதுகுறித்து திருப்போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். # tamilnews
திருப்போரூரை அடுத்த மடையத்தூரைச் சேர்ந்தவர் சிவா. இவர் நேற்று இரவு மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்போரூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
இரவு 8 மணியளவில் திருப்போரூர் அடுத்த தண்டலம் அய்யப்பன் கோவில் அருகே வந்தபோது காரின் ஏ.சி.யிலிருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக சிவா, மனைவி மற்றும் குழந்தையுடன் இறங்கினார். சிறிது நேரத்தில் கார் கொழுந்து விட்டு எரிந்தது.
இதுபற்றி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறு சேரி தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பிடித்த தீயை அணைத்தனர். என்றாலும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
கார் ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சிவா குடும்பத்துடன் கீழே இறங்கியதால் அவர்கள் தப்பினர்.
இதுகுறித்து திருப்போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். # tamilnews