செய்திகள்

யாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியமில்லை- கமல்ஹாசன்

Published On 2018-09-21 05:48 GMT   |   Update On 2018-09-21 05:48 GMT
யாரும், யாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கருணாஸின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Karunas
பீளமேடு:

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசினார். மேலும் கல்லூரி மாணவர்கள், தொழில்துறையினருடன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து இன்று சென்னை செல்வதற்காக பீளமேடு விமானநிலையத்துக்கு வந்த கமல்ஹாசனிடம் நடிகர் கருணாஸ் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து நிருபர்கள் கேட்டனர்.


அதற்கு பதில் அளித்து பேசிய கமல்ஹாசன், இன்னும் அந்த பேச்சை கேட்கவில்லை. அதற்கு முன்னர் அதுகுறித்து பேசுவது நியாயமாக இருக்காது. இருப்பினும் யாரும், யாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் அளித்தார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Karunas
Tags:    

Similar News