செய்திகள்

பண்ருட்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல் - வாலிபர் கைது

Published On 2018-09-19 22:13 IST   |   Update On 2018-09-19 22:13:00 IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாறன் (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை அந்த கடையின் அருகே பண்ருட்டி தண்டுபாளையம் பகுதியை சேர்ந்த அஜீத் (17) என்பவர் மது குடித்து கொண்டு இருந்தார்.

இதனை பார்த்த மாறன், இந்த இடத்தில் இருந்து மது அருந்தக்கூடாது என்று அஜீத்திடம் கூறினார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அஜீத், அருகில் கிடந்த இரும்பு குழாயால் மாறனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதில் படுகாயம் அடைந்த மாறனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து பண்ருட்டி போலீசில் மாறன் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா வழக்குப்பதிவு செய்து அஜீத்தை கைது செய்தார்.
Tags:    

Similar News