செய்திகள்

ஆம்பூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

Published On 2018-09-19 16:03 GMT   |   Update On 2018-09-19 16:03 GMT
ஆம்பூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே உள்ள நதிசீலபுரம் பகுதியை சேர்ந்தவர் அகமதுபாஷா இவரது மகன் ஜாபர் (வயது 26). இவர் ஒட்டலில் வேலை பார்த்து வருகிறார். ஜாபர் நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் ஜாபரை வழிமறித்து சரமாறியாக தாக்கி அவரிடம் இருந்து ரூ.1000 மற்றும் 2 செல்போன்களை பறித்து சென்று விட்டனர்.

இது குறித்து ஜாபர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ஆம்பூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த இமானுவேல் (23). ஆனந்தன் (29). ஆகிய 2 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News