செய்திகள்

திருமங்கலத்தில் கழுத்தை அறுத்து இளம்பெண் தற்கொலை

Published On 2018-09-19 06:30 GMT   |   Update On 2018-09-19 06:30 GMT
திருமங்கலத்தில் கழுத்தை அறுத்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

திருமங்கலம் திருவல்லீஸ்வரர் நகர் இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலதி (வயது28). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

மாலதி கடந்த சில மாதங்களாக சிறிது மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் பாடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று காலை குளியலறைக்கு சென்ற மாலதி திடீரென தனது கழுத்தை கத்தியால் அறுத்து கொண்டார். அலறல் சத்தம் கேட்டு வந்த செந்தில்குமார், ரத்த வெள்ளத்தில் மனைவி மாலதி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சை பலனின்றி மாலதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News