செய்திகள்

வடலூரில் தொழிலாளிக்கு கத்திக்குத்து வாலிபர் கைது

Published On 2018-09-15 11:59 GMT   |   Update On 2018-09-15 11:59 GMT
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது38). தொழிலாளி.

இவருக்கும் கடலூர் பகுதியை சேர்ந்த காதர் மொய்தீனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் காதர் மொய்தீன் அவரது நண்பர் ராம்குமார் (29) என்பவரை அழைத்து கொண்டு வடலூருக்கு சென்றார்.

அப்போது அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த மணிகண்டனை வழிமறித்து காதர் மொய்தீனும்,ராம்குமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த ராம்குமார் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் வயிற்றில் குத்தினார்.

இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பலத்த காயம் அடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கபட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து வடலூர் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். புகாரின் பேரில் காதர் மொய்தீன், ராம்குமார் ஆகிய 2 பேர் மீதும் போலீசார்வழக்குபதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.காதர் மொய்தீனை வலை வீசி தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News