செய்திகள்

விடுதியில் தங்கி இருந்த அரசு பள்ளி மாணவி 6 மாத கர்ப்பம்- ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2018-09-15 11:37 GMT   |   Update On 2018-09-15 11:37 GMT
நம்பியூர் அருகே விடுதியில் தங்கி இருந்த அரசு பள்ளி மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் மாணவியை கோபி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

நம்பியூர்:

திருப்பூரை சேர்ந்த பனியன் கம்பெனி ஊழியரின் மகள் நம்பியூர் அருகே அரசு பள்ளி விடுதியில் தங்கியிருந்து 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று இரவு விடுதியில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை வார்டனிடம் அந்த மாணவி தெரிவித்தார்.

இதையடுத்து அந்த மாணவி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அந்த மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாணவியின் தாய் கோபிக்கு வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவியை அழைத்து சென்றார். மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News