செய்திகள்

ஆம்பூர் அருகே நர்ஸ் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

Published On 2018-09-14 10:10 GMT   |   Update On 2018-09-14 10:10 GMT
ஆம்பூர் அருகே நர்ஸ் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே உள்ள ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 57). இவர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

சரஸ்வதி நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இன்று காலை வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த சரஸ்வதி வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்ததது.

இது குறித்து சரஸ்வதி ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை பார்வையிட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News