உலகம்

ஈரானில் சோகம்: துறைமுகத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலி

Published On 2026-02-02 05:16 IST   |   Update On 2026-02-02 05:16:00 IST
  • ஈரானில் பொருளாதார இழப்பு காரணமாக போராட்டம் நடந்து வருகிறது.
  • போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நிற்போம் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

தெஹ்ரான்:

ஈரானில் பொருளாதார இழப்பு காரணமாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நிற்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அமெரிக்க போர்க் கப்பல்கள் அடங்கிய படையை அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஈரானில் உள்ள துறைமுகங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஈரானில் உள்ள பிரபல துறைமுகமான பந்தர் அபாசில் ஈரான் நாட்டிற்கு சொந்தமான போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. திடீரென அந்தத் துறைமுகத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

Tags:    

Similar News