செய்திகள்

கொருக்குப்பேட்டையில் குடிநீர் வாரிய ஊழியர் மீது தாக்குதல்

Published On 2018-09-14 09:22 GMT   |   Update On 2018-09-14 09:22 GMT
கொருக்குப்பேட்டையில் குடிநீர் வாரிய ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து சக ஊழிர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயபுரம்:

கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ரங்கன். இவர் குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிகிறார். நேற்று இரவு தியாகப்ப தெருவில் குடிநீர் வழங்க ரோட்டில் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபர் தகராறு செய்து அவரை தாக்கி விட்டு ஓடி விட்டார்.

இதை அறிந்த சக ஊழியர்கள் கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் இன்று ஒன்று திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து ஆர்.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது.
Tags:    

Similar News