செய்திகள்

எண்ணூரில் ரெயில் மோதி மாணவர் பலி

Published On 2018-09-13 10:45 GMT   |   Update On 2018-09-13 10:45 GMT
எண்ணூரில் உறவினர்களை பார்ப்பதற்காக வந்த மாணவர் தண்டவாளத்தை கடந்த போது மின்சார ரெயில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தார்.
ராயபுரம்:

கொளத்தூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் மஞ்சுநாதன் (21). இவர் புழல் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வந்தார்.

உறவினர்களை பார்ப்பதற்காக மாணவர் மஞ்சுநாதன் எண்ணூர் சென்றார். அங்கு தண்டவாளத்தை கடந்த போது மின்சார ரெயில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்து குறித்து கொருக்கபேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News