செய்திகள்

திருமானூர் அருகே எலி மருந்தை தின்ற நர்சிங் மாணவி பலி

Published On 2018-09-12 16:27 GMT   |   Update On 2018-09-12 16:27 GMT
திருமானூர் அருகே படிக்க சொல்லி பெற்றோர் கண்டித்ததால் நர்சிங் மாணவி எலி மருந்தை தின்று பலியானார்.
அரியலூர்:

திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சினேகா (வயது 17) கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் சினேகாவை சரியாக படிக்க வேண்டும் என்று பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த சினேகா சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) தின்று வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதைபார்த்த அவரது உறவினர்கள் சினேகாவை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சினேகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News