செய்திகள்

மாமல்லபுரம் அருகே கார் மோதி கொத்தனார் பலி

Published On 2018-09-12 08:44 GMT   |   Update On 2018-09-12 08:44 GMT
மாமல்லபுரம் அருகே கார் மோதி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

மாமல்லபுரம்:

திருப்போரூரை அடுத்த மானாமதிபகுதியை சேர்ந்தவர் வீரராகவன் (வயது58) கொத்தனார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் வாணியுடன் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் அடுத்த தேவநேரிக்கு கட்டிட வேலைக்கு சென்றார்.

கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வந்த போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வீரராகவன் பலியானார் படுகாயம் அடைந்த வாணிக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags:    

Similar News