செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - டிரைவர் பலி

Published On 2018-09-11 16:06 GMT   |   Update On 2018-09-11 16:06 GMT
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஜே.சி.பி. டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.
திருப்புவனம்:

மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் முனீசுவரன்(வயது 32). இவர் ஜே.சி.பி. டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை பூவந்தியில் இருந்து சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதேபோன்று சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை புதுச்சேரியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் ஓட்டிச் சென்றார். பூவந்தி கீழ்புறம் உள்ள வளைவில் வந்தபோது மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட முனீசுவரன் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்குப்பதிந்து லாரி டிரைவர் அருள்ராஜை கைதுசெய்தார். 
Tags:    

Similar News