செய்திகள்

பண்ருட்டி அருகே விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-09-08 13:35 GMT   |   Update On 2018-09-08 13:35 GMT
பண்ருட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:

பண்ருட்டியை அடுத்த பண்டாரக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 63), விவசாயி. இவர் தனது வயலில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கண்ணன் இறந்தார்.

இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் கண்ணனுக்கு வயிற்று வலி இருந்தது இதன் காரணமாக அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Tags:    

Similar News