செய்திகள்

கணவரால் வெகுதூரம் சென்று சரக்கு வாங்க முடியவில்லை - டாஸ்மாக் கடையை திறக்க வலியுறுத்திய பெண்கள்

Published On 2018-09-08 13:13 GMT   |   Update On 2018-09-08 13:13 GMT
விழுப்புரம் அருகே கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று குடிக்க முடியாமல் தவிப்பதாகக் கூறி மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என பெண்களே போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Viluppuram #Tasmac
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை, அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்களின் போராட்டத்தால் மூன்று மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மது வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தங்கள் கணவன்மார்கள் மது வாங்குவதற்காக வெகுதூரம் சென்று சிரமப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறி மதுப்பிரியர்களின் மனைவிகள், மீண்டும் டாஸ்மாக்கை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே டாஸ்மாக் கடை மூடுவதற்கு காரணமாக இருந்த பெண்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Viluppuram #Tasmac
Tags:    

Similar News