செய்திகள்

சக்கரம் மாற்றியபோது லாரி சாய்ந்து வேலூர் டிரைவர் நசுங்கி பலி

Published On 2018-09-07 17:19 GMT   |   Update On 2018-09-07 17:19 GMT
சக்கரம் மாற்றியபோது லாரி சாய்ந்து வேலூர் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தண்டராம்பட்டு:

வேலூர் சாயிநாதபுரத்தை சேர்ந்தவர் புகழேந்தி மகன் தமிழேந்தி (வயது 35). லாரி டிரைவர். நேற்று மதியம் 1 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி மினி லாரியில் சென்று கொண்டிருந்தார்.

கொளக்குடி அருகே சென்ற போது மினி லாரியின் பின்பக்க சக்கரம் வெடித்தது. இதனையடுத்து சக்கரத்தை மாற்றும் பணியில் தமிழேந்தி ஈடுபட்டார்.

அப்போது வாகனத்தின் பின் பகுதியில் ஜாக்கி வைத்து வாகனத்தை மேலே தூக்கிய போது மினி லாரி தமிழேந்தி மீது சாய்ந்தது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வெறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழேந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவரது மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News