செய்திகள்
அவசர தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்த கருத்து கேட்க தேவையில்லை- உயர்நீதிமன்றம்
அவசர தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு கருத்து கேட்க தேவையில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #LandAcquisition #MadrasHC
சென்னை:
சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவசர தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்ற சட்டப்பிரிவை நீக்கக் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, நில உரிமையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துப் பலன்களும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார். அதன் நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு சந்தை மதிப்பை விட 3 முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் மனுதாரர் மற்றும் மத்திய அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, அவசர தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்த கருத்து கேட்க தேவையில்லை என்ற சட்டப்பிரிவு செல்லும் என்று கூறிய நீதிபதிகள், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனின் மனுவை தள்ளுபடி செய்தனர். #LandAcquisition #MadrasHC
சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவசர தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்ற சட்டப்பிரிவை நீக்கக் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, 2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் உள்ள பிரிவு 105-ன்படி, தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும்போது சமூக பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளதாகவும், இது மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தடுக்கும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் மனுதாரர் மற்றும் மத்திய அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, அவசர தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்த கருத்து கேட்க தேவையில்லை என்ற சட்டப்பிரிவு செல்லும் என்று கூறிய நீதிபதிகள், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனின் மனுவை தள்ளுபடி செய்தனர். #LandAcquisition #MadrasHC