செய்திகள்
திருச்சி வங்கியில் கார் வாங்குவதற்காக போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.18 லட்சம் மோசடி
திருச்சி வங்கியில் கார் வாங்குவதற்காக போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.18 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி:
திருச்சி தில்லைநகரில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மற்றொரு கிளையான இனாம் குளத்தூர் கிளையில் அக்பர் (வயது 55) மேலாளராக பணி புரிந்து வருகிறார்.
அந்த வங்கியில் கார் வாங்குவதற்காக தனியார் நிறுவனம் பெயரில் ரூ.18 லட்சம் கடன் பெறப்பட்டுள்ளது. பின்னர் வங்கியில் காரின் ஆவணங்களை ஒப்படைக்கு மாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் சமர்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரிய வந்தது.
இது குறித்து வங்கி மேலாளர் திருச்சி மாநகர துணை கமிஷனரிடம் புகார் செய்தார். இது குறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த நாகராஜ் (53), விமல் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.