செய்திகள்

கேரள வெள்ள பாதிப்புக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி - வைகோ அறிவிப்பு

Published On 2018-08-26 20:18 GMT   |   Update On 2018-08-26 20:18 GMT
கேரள வெள்ள பாதிப்புக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். #KeralaFlood #MDMKVaiko
சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலத்தில் நூறாண்டு காலத்தில் ஏற்படாத இயற்கை பேரிடராக நேர்ந்த பிரளயம் போன்ற வெள்ளப் பெருக்கால் அம்மாநிலமே தண்ணீரில் தத்தளிக்கிறது. கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, அவர்கள் வேண்டுகிற நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கேரள மாநில அரசுக்கு ம.தி.மு.க. ரூ.10 லட்சம் ரூபாய் நிதி வழங்குகிறது. மேலும், தேவையான நிவாரணப் பொருட்களைச் சேகரித்து அனுப்புகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #KeralaFlood #MDMKVaiko
Tags:    

Similar News