செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி பேனரை எரித்தவர் கைது

Published On 2018-08-22 14:04 GMT   |   Update On 2018-08-22 14:04 GMT
திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு பஸ் நிறுத்தத்தில் வைத்திருந்த விடுதலை சிறுத்தை கட்சி பேனரை எரித்தவர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி இவரது மகன் கண்ணன் வயது (47) இவர் கடந்த 17 ந் தேதி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு தனது ஊரில் பஸ் நிறுத்தத்தில் திருமாவளவனை வாழ்த்தி இலையூர் கடைவீதி அருகே டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார்.  

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டிஜிட்டல் பேனரை யாரோ மர்மநபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இது குறித்து கண்ணன் ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்ததில் அதே பகுதி செம்மண்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் ராமமூர்த்தி (21) எரித்தது தெரியவந்ததை அடுத்து அவர் மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.
Tags:    

Similar News