செய்திகள்

கேரள வெள்ள நிவாரணம்- தமிமுன் அன்சாரி 1 மாத சம்பளத்தை வழங்கினார்

Published On 2018-08-21 08:57 GMT   |   Update On 2018-08-21 08:57 GMT
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். #KeralaFloods
சென்னை:

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கட்சியினரின் அறிவுறுத்தலின் பேரில், எனது ஒரு மாத சம்பளத்தை வழங்கி இருக்கிறேன். நாகப்பட்டினம் தொகுதி மக்கள் தங்களது நிவாரண உதவிகளை நாகை எம்.எல்.ஏ. அலுவலக்தில் வழங்கலாம். அப்படி பெறப்படும் பொருட்கள் ரெயில் மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #KeralaFloods

Tags:    

Similar News